நிகழ்ச்சியில் இருந்து திடீரென்று விலகியது ஏன்...? நட்சத்திர ஜோடி விளக்கம்
By Aravind Selvam | Galatta | August 24, 2021 15:28 PM IST
விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலங்களாக உள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று Mr and Mrs சின்னத்திரை.பிரபல ஜோடிகளை ஒன்றினைத்து சில போட்டிகள் வைத்து அதில் வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் சரத்,திவாகர்,மைனா,வினோத் உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்க்கை துணையோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த சில எபிசோடுகளாக இந்த நிகழ்ச்சியின் பங்கேற்று வந்த மணிகண்டன் மற்றும் சோபியா தம்பதியினர் மிஸ் ஆகி வந்தனர் இதுகுறித்து தற்போது சோபியா விளக்கம் கொடுத்துள்ளார் சில தவிர்க்க முடியாத உடல்நிலை பிரச்சனைகளால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் வைல்ட் கார்டு சுற்றில் மீண்டும் வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.இருவரும் விரைவில் இந்த நிகழ்ச்சிக்கு திரும்பிவரவேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Vijay Antony's directorial debut Pichaikkaran 2 begins with a pooja - Check out!
01/09/2021 08:05 PM