இயக்கம் தாண்டி தயாரிப்பாளாராகவும் அசத்தி வருகிறார் விக்னேஷ் சிவன்.  நடிகை நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தங்களது ரெளடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார், விக்னேஷ் சிவன். இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை சமீபத்தில்தான் கைப்பற்றியது.

தற்போது அறிமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான கூழாங்கல் படத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

இது குறித்து விக்னேஷ் சிவன் முன்பு வெளியிட்ட அறிக்கையில், மிக அரிதான ஒரு நாள்தான். ஒரு படைப்பை பார்த்து வியந்து நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நாளாக இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த கூழாங்கல் என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் வினோத்ராஜின் முதல் படம் என்றாலும் தலைப்பை போலவே எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது என்று புகழாரம் சூட்டினார். 

முழுக்க முழுக்க அறிமுக நடிகர்கள் இயக்கனரால் எடுத்தப்பட்ட இப்படத்திற்கு தன்னுடைய பின்னணி இசையால் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் பிரிவுக்கு போட்டியிட்டது இப்படம். இந்த விழாவிற்கு பாரம்பரிய உடையில் சென்று அசத்தினர் படக்குழுவினர். இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூழாங்கல் திரைப்படம் நியூ டைரக்டர்ஸ் திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியுள்ளது. கூழாங்கல் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் படக்குழுவினர். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே திட்டமிட்டபடி படப்பிடிப்பை துவங்க முடியாமல் போனது. இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது.