கலைப்புலி S தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். தனுஷ் 41 ஆன இந்த படத்தின் டைட்டில் கர்ணன் என கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். 

karnan

நடிகர் லால், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் துவங்கப்பட்டது. ஜனவரி 20-ம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் துவங்கியது. 

karnan dhanush

கையில் கத்தியுடன் தனுஷ் இருக்கும் பிரத்தியேக புகைப்படம் சமீபத்தில் வெளியாகி அசத்தியது. தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், 90 சதவீத படப்பிடிப்பு முடிந்தது என தனுஷ் பதிவு செய்துள்ளார். மேலும் குதிரையுடன் இருக்கும் புகைப்படத்தை அப்பதிவுடன் பகிர்ந்துள்ளார்.