பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படைப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் ராமின் கற்றது தமிழ், தங்க மீன்கள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது கலைப்புலி S தாணு தயாரிப்பில் நடிகர் தனுஷ் வைத்து கர்ணன் படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் நடந்து முடிந்தது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இதன் ஷூட்டிங் நடைபெற்றது. 

படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் கர்ணன் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணுவின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து கூறி பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் நேற்று தனது திருமணநாளை கொண்டாடியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். லாக்டவுனில் வீட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அருகில் அவரது மனைவி திவ்யா மாரிசெல்வராஜ் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மாரி செல்வராஜ் பகிர்ந்த இந்த புகைப்படம் இணையத்தை ஈர்த்து வருகிறது. மாரி செல்வராஜின் இந்த பதிவின் கீழ் பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கர்ணன் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீஸர் அப்டேட்டை கேட்டு வருகின்றனர். 

இம்மாதம் முழுவதும் தனுஷ் பிறந்தநாள் கொண்டாடத்தை துவங்கிய தனுஷ் ரசிகர்கள், ஜகமே தந்திரம் படத்தின் அப்டேட்டை கொண்டாடினர். இதனைத்தொடர்ந்து கர்ணன் படக்குழுவினர் தரப்பிலிருந்து ஏதேனும் அப்டேட் வருமா என்ற ஆவலில் உள்ளனர்.