ஒர்க்கவுட்டின் முக்கியத்துவம் குறித்து பதிவிட்ட ஐஸ்வர்யா மேனன் !
By Aravind Selvam | Galatta | June 30, 2020 18:45 PM IST
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் முக்கியமான ஒருவர் ஐஸ்வர்யா மேனன்.மாடலாக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் நாயகியாக ஐஸ்வர்யா மேனன் உயர்ந்துள்ளார்.கிருஷ்ணா நடித்த வீரா படத்தில் வரும் வெரட்டாம வெரட்டுறியே பாடல் மூலம் தமிழ் இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்தார் ஐஸ்வர்யா மேனன்.
இதனை தொடர்ந்து மிர்ச்சி ஷிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான கதாநாயகியாக அவதரித்தார் ஐஸ்வர்யா மேனன்.தமிழ் மட்டுமின்றி மலையாளம்,கன்னட உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
சமீபத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த நான் சிரித்தால் படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா இளைஞர்கள் மத்தியில் கனவுகன்னியாக்க அவதரித்தார் ஐஸ்வர்யா மேனன்.
இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் அழகிலும்,நடன அசைவுகளிலும் தமிழ் ரசிகர்கள் பிளாட் ஆகி விட்டனர்.இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் போடும் புகைப்படங்களுக்கும்,வீடியோக்
நடனத்திலும்,உடற்பயிற்சியிலும் மிகவும் ஆர்வம் கொண்டவரான ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும்,ஒர்க்கவுட் வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.கொரோனா காரணமாக எப்போதும் சமூகவலைத்தளங்களில் பிரபலங்கள் ஏதேனும் ஒரு அப்டேட் வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் தான் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.அதில் தான் ஒர்க்கவுட் செய்வதே தனக்கு பிடித்த சாப்பாடை தவறாமல் சாப்பிட தான் என்று தெரிவித்துள்ளார்.மேலும் தனது அம்மா தன்னை மறைந்திருந்து பார்த்து வருகிறார் அதையும் கவனியுங்க என்று பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்