தயாரிப்பாளர்களின் நன்மைக்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் எடுத்த முடிவு !
By Sakthi Priyan | Galatta | May 08, 2020 12:14 PM IST
தமிழ் திரையுலகில் இளம் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். பியார் ப்ரேமா காதல், இஸ்பேடுராஜாவும் இதயராணியும் போன்ற படங்களால் இளைஞர்கள் விரும்பும் நாயகனாக திகழ்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ஊரடங்கு காரணமாக திரையரங்கில் ஓட முடியாமல் போனது, இருந்தாலும் ஆன்லைனில் அசத்தலான வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு போடப்பட்டு 50 நாட்களை நெருங்கி வருகிறது. இதனால் திரைத்துறை கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களின் நன்மைக்காக, தனது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். கார்த்திக் சுந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Oh My Kadavule to be remade in Hindi - confirms director Ashwath Marimuthu
08/05/2020 02:00 PM
Reports: Arvind Swami said to be in talks to act as the antagonist in Prabhas 21
08/05/2020 01:17 PM
Alya Manasa and Sanjeev share the picture of their baby Alia Syed
08/05/2020 11:29 AM