தமிழ்  சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் மணிரத்தினத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் கௌதம் கார்த்திக் அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

முன்னதாக கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் விரைவில் வெளிவர தயாராகி வருகிறது. இதனிடையே நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் தற்போது கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த சில காலமாகவே நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.

நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து சத்ரியன், துக்ளக் தர்பார், FIR உள்ளிட்டா பல படங்களில் நடித்துள்ள நடிகை மஞ்சிமா மோகன் தேவராட்டம் திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்துள்ளார். அந்த சமயத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவின.

இதனையடுத்து சமீபத்தில் இருவரும் தங்களது காதலை உறுதிப்படுத்தினர். தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நவம்பர் 28ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்தனர். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என மிக நெருங்கிய வட்டாரத்தோடு மட்டுமே திருமணம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். 

அந்த வகையில் தற்போது இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கலாட்டா குழுமம் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவருக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

 

View this post on Instagram

A post shared by Manjima Mohan (@manjimamohan)

 

View this post on Instagram

A post shared by Manjima Mohan (@manjimamohan)