தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் !
By Aravind Selvam | Galatta | August 27, 2019 16:30 PM IST
பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 3 அல்லது 4 ஆம் தேதி லண்டனில் தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஷஷிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழிச்சியில் உள்ளனர்.