தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் ஹைப்பர் லிங்க் படமாக தயாராகியுள்ள கசட தபற திரைப்படத்தை பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிம்புதேவன் எழுதி இயக்குகிறார்.கசட தபற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி அமரன், சாந்தனு பாக்கியராஜ், ப்ரியா பவானி சங்கர், ரெஜினா கெஸன்ட்ரா, விஜயலட்சுமி, ஜனனி ஐயர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடதக்கது. 

தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களான விஜய்மில்டன் ,எம்.எஸ்.பிரபு ,பாலசுப்ரமணியம் , எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர் மற்றும் சக்தி சரவணன் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்ய ,யுவன் ஷங்கர் ராஜா, ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன்,சாம் சி எஸ்,ஜிப்ரான் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் கசடதபற திரைப்படத்திலிருந்து புதிய பாடல் இன்று வெளியானது . இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின்  இசையில் கவிஞர் சினேகனின் வரிகளில் வெளியான எனக்கென்ன ஆச்சு என்னும் அழகான பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.