செப்டம்பரில் சரவெடி ! அதிரடியான அப்டேடுடன் வந்த பிகில் தயாரிப்பாளர்
By Aravind Selvam | Galatta | August 29, 2019 11:59 AM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.மேலும் பிகில் ஒரு கனவு படம் உங்கள் எதிர்பார்ப்பை மீறிய ஒரு படமாக இது நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு தளபதி ரசிகையாக அப்டேட்க்கு காத்திருப்பது எவ்வளவு கடினம் என்பது தெரியும் இருந்தாலும் இந்த காத்திருப்பு உங்களை ஏமாற்றாது.இனி நீங்கள் எதிர்பார்த்தபடி அப்டேட் கிடைக்கும்.செப்டம்பர் மாதம் என்னுடைய அடுத்த அப்டேட் வெறித்தனம் தான் என்று தெரிவித்துள்ளார்.