தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கி முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் வார இறுதியில் வந்து அசத்துகிறார்.

biggboss

பிக் பாஸ் 3-க்கான டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வனிதா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இறுதியாக ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். ரகசிய அறையில் இருந்து வீட்டிற்கு வந்தார் சேரன்.

biggboss

biggboss

தற்போது வெளியான ப்ரோமோவில், வார இறுதி நாளான இன்று கமல் ஹாசன் பங்கேற்பாளர்களிடம் எவிக்ஷன் குறித்து பேசுகிறார். அடுத்தடுத்து யார் வெளியேறப்போகிறீர்கள் என்று நீங்களே ஓர் முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று கூறுகிறார்.