பிக்பாஸ் நான்காம் சீசனில் ஃபைனலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகளும் தற்போது வழங்க தொடங்கப்பட்டு இருக்கிறது. நேற்றைய நாளில் நான் கோபத்தில் பேசிவிட்டேன் என பாலாஜி ஆரியிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின் வழக்கம்போல மீண்டும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்.

கிட்சனில் வேலை குறைவு அதனால் தான் கேபி அங்கேயே இருக்கிறார் என சொன்ன நீங்கள் தான் இந்த வாரம் அப்படியே மாற்றி கிட்சனில் வேலை அதிகம், housekeeping சுலபம் என்பதால் பாலாஜி அதில் இருக்கிறார் என சொல்கிறீர்கள் என குற்றம் சாட்டினார். ஒரு நாளுக்கு 2 மணி நேரம் வேலை செய்வது அதிகமா, அல்லது உங்கள் பெண்ணாக இருந்தால் ஊரே பாக்குது என சொல்லி இருப்பீர்களா எனவும் பிரச்னையை மீண்டும் கிளறினார். அதனால் மீண்டும் அவர்களுக்கு நடுவில் வாக்குவாதம் வெடித்தது. அதனால் இருவரும் மாறி மாறி குறை கூறி கொண்டனர். இப்படி மீண்டும் பேசினால் அவன் இவன் என்று தான் பேசுவேன் என்று கூறினார்.

ஆனால் சற்று நேரத்திற்கு பிறகு ஆரியிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இது வயசு கோளாறு. உங்கள் வயதுக்கு நான் வரும் போது இன்னும் mature ஆகிவிடுவேன் என கூறினார் பாலாஜி. அதற்கு பதில் அளித்த ரியோ எனக்கு கப்பு முக்கியம் இல்லை. நான் அதற்காக விளையாடவில்லை என முன்பே கூறிவிட்டேன். என்னை ஜெயித்துவிட்டு நீ கப் வாங்கினால் நான் நிச்சயம் மகிழ்ச்சி கொள்வேன் என ஆரி கூறினார்.

இந்த சீசனில் கடைசி நாமினேஷன் இன்று நடைபெறுகிறது என பிக் பாஸ் அறிவித்தார். ஓபன் நாமினேஷன் நடக்க தொடங்கியது. அப்போது ஒவ்வொருவராக அங்கு வந்து நாமினேஷன் செய்ய தொடங்கினர். இந்த வாரம் நடக்கும் எலிமினேஷனில் இருந்து தப்ப ஒரு வாய்ப்பு போட்டியாளர்களுக்கு வழங்கினார் பிக் பாஸ். வரிசையாக பல டாஸ்குகள் வாரம் முழுவதும் நடக்கும் என்றும் அதன் இறுதியில் யார் முதலிடத்தில் இருக்கிறாரார்களே அவருக்கு தான் டிக்கட் டு finale கிடைக்கும்.

முதல் டாஸ்காக பலூனை தூக்கி நிற்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது. பலூன் தூக்கும் டாஸ்கில் போட்டியாளர்கள் அதிக நேரம் தண்ணீர் இருக்கும் பலூனை தூக்கி பிடிக்க திணறினர். பெண் போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே பலூனை வெடித்துவிட்டனர். அதன் பின் மற்ற நான்கு பேருக்கும் இடையே போட்டி இருந்தது. அதில் ஆரி நான்காவதாக பலூனை உடைத்தார். அவருக்கு அடுத்து சோம் உடைத்தார்.

ஆனால் சோம் தன் கையை மடக்கினார், மேலே மற்றும் கீழே இறக்கினார் என ஆரி குற்றம்சாட்டினார். அதனால தனக்கு மூன்றாம் இடம் வேண்டும் என சண்டை போட்டார் ஆரி. இதனால் வாக்குவாதம் வெடித்தது. ஆரியும் சில தவறுகள் செய்திருக்கிறார் என சோம் குற்றம்சாட்டினார். இறுதியில் சோம் விட்டுக்கொடுத்து ஆரிக்கு மூன்றாம் இடம் கொடுத்தார். பாலாஜி முதலிடமும், ரியோ இரண்டாம் இடமும் பிடித்தனர்.

இன்றைய நாளில் வெளியான முதல் ப்ரோமோவில், பாடல் பாடும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வம் காட்டியது சுவாரஸ்யமாக இருந்தது. பர்சர் அழுத்தியவுடன் முதலில் பாடல் பாடுபவர்களே இதில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். பாலாஜி, ஷிவானி மற்றும் கேபி கடைசி வரை விளையாட...ரியோ ஜட்ஜாக இருக்கிறார். அப்போது கேபி ஓவர்டேக் செய்து பாடியதாக பாலாஜி வாக்குவாதம் செய்கிறார். புது பஞ்சாயத்து தயார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.