பிக் பாஸ் வீட்டில் 51-ம் நாளான நேற்று ஆரம்பத்திலேயே கேப்டன்ஸி டாஸ்க் பற்றி பாலாஜி, ஆரி, சனம்,அனிதா என நான்கு பேரும் விவாதம் செய்து கொண்டிருந்தனர். ஆரி கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்க்கில் குரூப்பிஸத்தினால் தன் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்கும் ரியோவின் திறமையை வெளிப்படுத்த விட்டுக்கொடுத்ததாக கூறிக்கொண்டிருந்தார்.

அதை தொடர்ந்து நாமினேஷன் செய்வதற்காக கன்பெஷன் ரூமிற்கு ஒவ்வொருவராக சென்றனர். அதில் ஆரி செல்லும் பொழுது அவர் ரொம்ப லென்த்தியாக பேசுவதை வைத்து கவுன்டவுன் ஸ்டார்ட் என ரமேஷ் கிண்டலாக கூறியதைக் கேட்ட ஆரி நீங்க யாரும் பேசவேமாட்டீங்களா? இப்படியெல்லாம் சொன்னீங்கன்னா அவ்வளவுதான் என கொந்தளித்தார்.

இந்த வார நாமினேசனில் ஆரி, பாலாஜி, சோம், நிஷா, அனிதா, ரமேஷ், சனம் என ஏழு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் நாமினேசன் செய்வதற்கு கூறிய காரணங்களை பிக் பாஸ் சூசகமாக கூறி நாமினேஷன் ஆனவர்களின் பெயர்களை கூறினார்.

பிக் பாஸ் கூறி முடித்ததும் பேச ஆரம்பித்த ஆரி கன்பெசன் ரூமிற்கு செல்லும் போது இப்படியெல்லாம் கிரிட்டிசைஸ் பண்றது அழுத்தத்தை ஏற்படுத்தி பேச நினைக்கிறதே மறந்து வேற எதையோ பேச வேண்டியதா இருக்கு என சொன்னார். உடனே பாலாஜி நீங்க முதலில் சரியாக பேசுங்க, ஹவுஸ்மேட்ஸுக்கு ஒன்னு சொல்றீங்க ஆனால் வேற மாதிரி நடந்துக்கிறீங்க என்றும் கேப்டன்ஸி டாஸ்க்கில் விட்டுக்கொடுத்ததாக ரகசியமாக பேசியதை சபையில் போட்டு உடைத்து இந்த வார பிர்ச்சனையை பிள்ளையார் சுழி போட்டு பாலாஜி ஆரம்பித்ததை பார்க்கும் பொழுது ஏற்கனவே திட்டம் போட்டிருந்ததை போல் தோன்றியது.

அதை கேட்ட போட்டியாளர்களில் ரம்யா மற்றும் சனம் சரமாரியாக ஆரியை கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதிலும் ரம்யா, ஏற்கனவே கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி, சம்யுக்தாவிற்காக விட்டுக்கொடுத்ததை தவறு என கூறிய ஆரி இன்று அதே தவறை நீங்க செய்றது தவறில்லையா? என கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே சனமும் தன் பங்கிற்கு பேச ஆரம்பித்தார்.

ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே அவரவர் கருத்துக்களை பேச ஒரு நிமிடத்தில் பிக் பாஸ் வீடே சந்தையை போல் மாறியது. அதில் ரம்யா தன் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கும் பொழுது கையை நீட்டி பேசிக்கொண்டிருந்த ஆரியை எதேட்சியாக ரம்யா அவரின் கையை தட்டிவிட எதற்கு இப்போழுது ஏன் கையை தட்டிவிட்டீங்க என கோபத்துடன் கேட்டார்.

அதற்கு பாலாஜி நீங்க எதுக்கு கையை நீட்டி பேசிறீங்க? என கேட்டார். இதற்கெல்லாம் ஆரி ஒன் மேன் ஆர்மியாக நின்று பதில் அளித்துக்கொண்டிருந்தார். அவர் பதில் கூறுவதை கேட்டு கொந்தளித்து போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஆரியை கார்னர் செய்து கேள்விகளை கேட்டனர்.

இந்த பிரச்சனையெல்லாம் ஒருபுறம் இருக்க, இன்றைய ப்ரோமோ சற்று சுவாரஸ்யமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. சம்யுக்தா மற்றும் பாலா கால் சென்டர் ஊழியர்களாக மாறி பதிலளிக்கின்றனர்.