மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார். அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. செவிலியரான ஜூலிக்கு வீரத்தமிழச்சி என்ற பெயரையும் பெற்று தந்தது. அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் நுழைந்தார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முழு நேர நடிகையாகவும் மாறி விட்டார் ஜூலி. 

ஜூலிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இச்செய்தி உண்மையில்லை இதை யாரும் நம்பவேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வலியுறுத்தினார் ஜூலி. ஜூலி பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் பயோபிக் படம், அம்மன் தாயி படம் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடிகை ஜூலி நடித்துள்ளார். சமீபத்தில் உடல் முழுவதும் கருப்பு நிற மை பூசிக் கொண்டு படு பயங்கரமான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் ஜூலி. சமூக வலைத்தளங்களில் ஜூலி பகிர்ந்த இந்த போட்டோக்கள் வைரலானது. 

மேலும், அந்த போட்டோஷூட்டை நடிகை ஜூலி ஒரு உயர்ந்த காரணத்திற்காகவே எடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். Black Lives Matterக்கு ஆதரவாக தனது சிறு முயற்சி என்றும், நிறத்திற்காக ஒரு மனிதரை வெறுப்பது என்பது கொடுமையான செயல், கருப்பும் ஒரு நிறம் தான் என்றும், கருப்பின மக்களுக்காக தன்னால் முடிந்த ஒரு சிறு செயல் இது என்றும் கேப்ஷன் செய்திருந்தார். 

இந்நிலையில், ஜூலியின் புதிய போட்டோஷூட் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சக்கை போடு போட்டு வருகிறது. உடல் முழுக்க வண்ணம் பூசி இந்த சவாலான போட்டோஷூட்டை செய்துள்ளார். மேலும் எந்திரன் படத்தில் வரும் சூப்பர்ஸ்டார் பாணியில் கையில் ரோஸ் வைத்தபடி போஸ் தந்துள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ஜூலியின் தீவிர ரசிகர்கள். 

ஜூலி செய்துள்ள கேப்ஷன் பாசிட்டிவான ஒரு விஷயத்தை அறிவுறுத்துகிறது. கேலி செய்பவர்கள் கேலி செய்யட்டும், வெற்றியை நோக்கி போய் கொண்டிருப்பவர்கள் எதையும் பொருட் படுத்தாமல் செல்வார்கள். எங்களுக்கு தெரியும் இதை நிச்சயம் கேலி செய்வார்கள் என்று, எங்கள் விடாமுயற்சி மற்றும் ஈடுபாட்டை கிண்டலடிப்பார்கள். எங்கள் பணியை நாங்கள் சரியாக செய்கிறோம் என்று கேப்ஷன் தந்துள்ளார்.