தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது .இவர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா படத்தில் நடித்து வருகிறார் லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடித்துவருகிறார்.இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

கிறிஸ்துமஸ் வாரத்தில் அநேகமாக இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதே வாரத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படமும் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.