தரமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வலுவான கதாபாத்திரங்களில் மிக சிறப்பாக நடித்து தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகையாக திகழ்பவர் நடிகை ஆண்ட்ரியா. அந்த வகையில் இயக்குனர் பிசாசு 2, மாளிகை மற்றும் கா உள்ளிட்ட த்ரில்லர் திரைப்படங்கள் ஆண்ட்ரியா நடிப்பில் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன. 

தொடர்ந்து பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் புதிய படம் மற்றும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து திரைப்படங்களில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் R.கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள  அனல் மேலே பனித்துளி திரைப்படம் கடந்த நவம்பர் 18ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் ரிலீஸானது. 

ஆண்ட்ரியா உடன் இணைந்து ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், அனுபமா குமார் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், B4U AND IVY என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கும் அனல் மேலே பனித்துளி படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

மிகவும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படமாக வெளிவந்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளதோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டுகளை பெற்றுள்ளது. பெண்கள் மீதான அடக்குமுறை, உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பெண்களுக்கு எதிராக நிகழும் அநீதிகள் குறித்து சமூக சிந்தனை கொண்ட பெண்கள் உடன் நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் R.கெய்சர் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு பேட்டி நமது கலாட்டா சேனலில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, “பஸ்ல போகும்போது என் டிரஸ் குள்ள ஒருத்தர் கை வைக்க ட்ரை பண்ணாரு அப்போ எனக்கு 11 வயசு இருக்கும்” என தனது வாழ்க்கையில் நடந்த மிக கசப்பான சம்பவத்தை எமோஷ்னலாக பகிர்ந்து கொண்டார். ஆண்ட்ரியாவின் அந்த பேட்டி இதோ…