A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து ரசிகர்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் கலந்துரையாடினார் அஜய் ஞானமுத்து.அதில் கோப்ரா குறித்த பல முக்கிய தகவல்களையும்,தனக்கு பிடித்தது,பிடிக்காதது என்று பல தகவல்களை பகிர்ந்துகொண்டார் அஜய் ஞானமுத்து.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் 7ஆம் அறிவு,துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் அஜய் ஞானமுத்து.தனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் தனது குரு ஏ.ஆர்.முருகதாஸ் தான் என்று தெரிவித்துள்ளார் அஜய்.தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தளபதி விஜய் தான் என்று தெரிவித்துள்ளார்.விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டதற்கு ஒரே தலைவன் என்று தெரிவித்துள்ளார்.நீங்க யாரோட ரசிகர் என்று மற்றறொரு ரசிகர் கேள்வி எழுப்ப யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருமோ அவரோட ரசிகர் என்று விஜயின் பஞ்ச் டயலாகுடன் ரிப்ளை செய்துள்ளார்.விஜயும்,விக்ரமும் சேர்ந்து ஸ்க்ரீனில் வந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர் கேட்க நீங்க சொல்றபோவே நல்ல இருக்கு நடந்தா இன்னும் சூப்பரா இருக்கும் என்று அஜய் தெரிவித்துள்ளார்.விஜயுடன் எப்போது படம் பண்ணபோகிறீர்கள் என்று ரசிகர் கேள்வியெழுப்ப அதற்கு தான் நானும் காத்திருக்கிறேன் என்று அஜய் ஞானமுத்து பதிலளித்து அசத்தியுள்ளார்.கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களின் கேள்விகளுக்கும் அஜய் ஞானமுத்து பதிலளித்துள்ளார்.