இணையவாசிகளை கவரும் ஐஸ்வர்யா தனுஷின் யோகாசனம் !
By | Galatta | August 06, 2020 11:46 AM IST
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் ஐஸ்வர்யா தனுஷ். தனுஷ் ரசிகர்களின் ஃபேவரைட்டான இந்த படத்தை எப்போது பார்த்தாலும் நிறைவாக இருக்கும். பள்ளி பருவ காதல், இறுதி வரை உடனிருக்கும் நண்பர்கள், உணர்வுபூர்வ காட்சிகள் என நேசிக்கவைக்கும் விஷயங்களை பதிவு செய்திருப்பார் இயக்குனர் ஐஸ்வர்யா R தனுஷ். ஐஸ்வர்யாவின் முதல் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பிரபு, சிவகார்த்திகேயன், சுந்தர், பானுப்பிரியா, ரோகினி போன்ற நட்சத்திரங்களை நடிக்கவைத்திருப்பார். இந்த படம் தான் ராக்ஸ்டார் அனிருத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. பாடல் மற்றும் பின்னணி என பின்னி பெடலெடுத்திருப்பார். அதன் பிறகு கவுதம் கார்த்திக் வைத்து வை ராஜா வை என்ற படத்தை 2015-ம் ஆண்டு இயக்கினார். அதன் பின் சினிமா வீரன் என்ற படத்தின் பணிகளை துவங்கினார் ஐஸ்வர்யா.
சமீபத்தில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளபக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டார் ஐஸ்வர்யா. தனுஷின் திரைப்பயண வெற்றிக்கு தனுஷ் எந்த அளவு காரணமோ, அதே அளவிற்கு தனுஷின் துணைவியான ஐஸ்வர்யாவிற்கும் பங்குண்டு. சிறந்த இயக்குனரான ஐஸ்வர்யா நடனத்திலும் திறன் வாய்ந்தவர். குறிப்பாக பரதநாட்டியத்தில் பட்டையை கிளப்புவார் ஐஸ்வர்யா. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் பாடலையும் பாடியிருப்பார் ஐஸ்வர்யா. பன்முகத்திறன் கொண்ட ஐஸ்வர்யா, தற்போது யோகாசனத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரபலங்கள் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் கவனம் செலுத்துவது புதிய விஷயம் இல்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் யோகாசன புகைப்படம் இணையத்தை அசத்தி வருகிறது. சலபாசனா எனும் ஆசனத்தை செய்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த யோகாவை எப்படி செய்யவேண்டும் என்பதையும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
உலகிற்கு நாம் அளித்த பழமையான பாரம்பரியம் கொண்ட ஒரு கலை தான் யோகாசன கலை. மனிதர்களின் உடலும், உள்ளமும் நலம் பெறவும், நோய்கள் நீங்கவும் சித்தர்கள் அளித்த இக்கலையை பயில்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். தினமும் யோகா சனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சு பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும். தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நம்முடைய மனம் பதற்றங்கள் நீங்கி அமைதியடைகிறது. மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அத்தனை குறைபாடுகளும் நீங்குகிறது.
இக்காலத்து இளைஞர்கள் டிஜிட்டல் உலகில் தவமிருக்க, ஐஸ்வர்யாவின் இச்செயல் பல பாராட்டுக்களை பெற்று வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் இளமையாக இருக்க முழு காரணம் இந்த யோகா தான் என்பது ரசிகர்கள் அறிந்ததே.
STR's next biggie dropped? - Official statement from producer!
06/08/2020 12:27 PM
This Kamal Haasan film to get a sequel? Official Clarification here!
05/08/2020 07:06 PM
Interesting new rule for Bigg Boss season 4 contestants
05/08/2020 07:05 PM