மதுமிதாவை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் ?
By Aravind Selvam | Galatta | August 18, 2019 10:27 AM IST
சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல்ஹாசன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதை பற்றி பேசுகிறார்.நீங்கள் எதிர்பாராமல் ஒருவர் வெளியேறியதால் வழக்கம் போல் நடக்கும் எவிக்ஷன் நடக்காது என்று நினைக்கவேண்டாம் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.