STR நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தார். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

manjima

மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று பதிவு செய்திருந்தார் மஞ்சிமா. இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் தவறான முறையில் கமெண்ட் செய்திருந்தார்.

Manjima

இதற்கு பதிலளித்த மஞ்சிமா பொதுவாக இப்படிபட்ட மனிதர்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால் மக்களை வீட்டில் இருக்க சொன்னதற்கு எனக்கு கிடைத்தது இதுதான். வீட்டில் இருந்தாலும் சிலருக்கு பிரச்சனை இல்லை என்று நினைப்பது தவறு. எங்களுக்கு பணம் ஒன்றும் வானத்தில் இருந்து விழவில்லை என்று கூறியிருந்தார்.