கடந்த 2006-ம் ஆண்டு சுந்தர்.சி நடித்து வெளியான தலைநகரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜோதிர்மயி. அதனைத்தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தார். சபரி, நான் அவனில்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற வெற்றி படங்களின் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். 

Jothirmayi

தமிழில் கடைசியாக வெடிகுண்டு முருகேசன் படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தவர், டிவி சீரியல்களிலும் தலைகாட்டினார். கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமாகிய அமல் நீரடை திருமணம் செய்தார். 

jothirmayi

இந்நிலையில் அமல் நீரட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிர்மயி மொட்டையடித்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவில் தமசோமா ஜோதிர்கமய என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tamasoma Jyothirgamaya 😊 . #Jyothirmayee

A post shared by Amal Neerad (@amalneerad_official) on