தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் விதார்த் ஆரம்பக்கட்டத்தில் பல திரைப்படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மைனா படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார்.

தொடர்ந்து ஆள், குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு, காற்றின் மொழி, கார்பன் உள்ளிட்ட நல்ல கதைக்களங்கள் உள்ள திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த விதார்த் அஜித்குமாரின் வீரம், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அன்பறிவு உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார்.

முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான விக்ருதி படத்தின் தமிழ் ரீமேக்காக சில வாரங்களுக்கு முன் வெளிவந்த பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

GREENATIVE FILMS தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு S.R.சதீஷ்குமார் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் விதார்த்தின் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

.@Greenativefilms Production No.1 starring @vidaarth_actor got off to a great start today with a pooja. Film directed by @MnManimaran & produced by #MohanRakeshBabu.#GreenativeFilmsProductionNo1@GhibranOfficial #SRSathishKumar @Inagseditor @DineshSubbaray1 #ARMohan pic.twitter.com/aedRJDGEOy

— Yuvraaj (@proyuvraaj) July 1, 2022