இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக தனது பணியை ஆரம்பித்த நடிகர் கார்த்தி,இயக்குனர் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த பையா நான் மகான் அல்ல சிறுத்தை என தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார். 

actor karthis paruthiveeran fame panjavarnam granma passes away

நடிகர் கார்த்தி கடைசியாக பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்த சுல்தான் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இத்திரைப்படத்தின் பாடல்களை இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்தார் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக தமிழில் நடித்த இத்திரைப்படத்திற்கு மாஸ்டர் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளிவர உள்ள சர்தார் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்தார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 

இந்த நிலையில் பருத்தி வீரன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து  பருத்திவீரனில் அவருக்கு அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம்  உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த நடிகர் கார்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், 

“பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும் வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” 

என பதிவிட்டுள்ளார்.