தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக சில தொடர்களில் நட்சத்திரங்கள் மாற்றப்பட்டனர்.சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.

புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.அப்படி புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களில் ஒன்று பூவே உனக்காக தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது இந்த தொடர்.அருண்,ராதிகா ப்ரீத்தி,ஜோவிதா லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன் ஜோவிதா இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவர் விலகியபிறகும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழு பார்த்துக்கொண்டனர்.தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் நாயகனாக நடித்து வரும் அருண் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.