செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சரண்யா.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.இவர் ஹீரோயினாக நடித்து வரும் ஆயுத எழுத்து தொடரின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் அப்டேட்களை பதிவிடுவார் சரண்யா.இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு கடந்த 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் சரண்யா.தற்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஒரு போட்டோஷூட்டின் இடையில் நடனமாடி அதனை ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.இவரது இந்த கியூட்டான நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Let Nothing stop your Being your own kind of HAPPY 🐒😍

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on