கதை சுவாரசியமா இருக்க ஒரு பிட் சேத்துட்டேன் மாட்டிக்கொண்ட வனிதா !
By Aravind Selvam | Galatta | August 24, 2019 18:50 PM IST
சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதாவும் கஸ்தூரியும் வாத்து பிரச்னையை பற்றி கமலிடம் பேசுகிறார்கள்.அப்போது வனிதா கதை கொஞ்சம் சுவாரசியமா போக மசாலா சேர்த்து விட்டதாக சொல்கிறார்.மேலும் எதாவது சொல்லவிரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு பயமாகஇருக்கிறது என்று தெரிவிக்கிறார்.