“தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின் தான்” என்று, பிசிசிஐ முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து சச்சின், தோனி ஆகிய இருவரும் ஓய்வு பெற்றிருந்தாலும், அவர்கள் இருவரும் படைத்துவிட்டுச் சென்ற சாதனைகள் அவ்வளவு பெரிது. அதனால் தான், சச்சின்னை கிரிக்கெட்டின் கடவுள் என்று, அவரது ரசிகர்கள் இன்று வரை அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது போலவே, தோனி கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்துவிட்டாலும், அவரையும் இன்று வரை கேப்டன் தோனி என்றே கிரிக்கெட் ரசிகர்கள் அப்படி ஒரு அலாதியான அன்போடு அழைத்து வருகிறார்கள்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த 2005 ஆம் அண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை பிசிசிஐ தலைவராக இருந்தவர், தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் சரத் பவார்.

சரத் பவார், ஐசிசி தலைவராகவும் சில ஆண்டுகள் செயல்பட்ட போது, அது தொடர்பாக அந்த பணிகள் குறித்து தனியர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில், பல்வேறு நிகழ்வுகளை அவர் நினைவு கூர்ந்துள்ளார். 

அதில் “கடந்த 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது இங்கிலாந்தில் 
தானும் இருந்தேன் என்றும், அப்போது தன்னிடம் வந்த டிராவிட், என்னிடம் “இனி மேலும் இந்தியாவுக்குத் தலைமை ஏற்க நான் விரும்பவில்லை. கேப்டனாக இருப்பதால் என்னுடைய பேட்டிங் திறன் அப்படியே பாதிக்கப்படுகிறது” என்று கூறியதாகக் குறிப்பிட்டார். 

அத்துடன், “தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கும் படியும் டிராவிட்” என்னிடம் கேட்டுக்கொண்டார் என்றும், கூறினார். 

“அப்போது, உடனடியாக நான் சச்சினிடம் இது தொடர்பாகப் பேசினேன் என்றும், கேப்டன் பொறுப்பை ஏற்குமாறு கேட்டேன்” என்றும், கூறினார். 

“ஆனால், அதனை ஏற்க அவரும் அப்போது மறுப்பு தெரிவித்து விட்டார். அப்போது, நான் கோபமடைந்து, நீங்கள் இருவருமே மறுத்தால் நான் யாரை தான் கேப்டன் பொறுப்பில் அமர வைப்பது” என்று கேள்வி கேட்டேன். 

“அப்போது தான் சச்சின் கூறினார், “தோனியின் பெயரை பரிந்துரை செய்தார்”. அதன் பின்பு தான், நான் தோனியை இந்திய அணியின் கேப்டனாக நியமனம் செய்தேன்” என்றும், அவர் தெரிவித்தார்.

இதனிடையே, “கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்து வெளியேறியது. அதன் பின்பு, அந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை இந்தியா படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.