அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஏபி டி வில்லியர்ஸ் கிரிக்கெட் உலகின் மந்திரச்சொல். கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகச் சிறந்த வீரர்கள் உருவாகி உள்ளனர். அதில் ஒருவர்தான் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ். இவரை அதிரடி ஆட்டக்காரர் என அழைத்துதான் நாம் பார்த்திருப்போம். ஆம் அணிக்கு இக்கட்டான நிலைமை என்றால் 400 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் அடிக்கவும் தெரியும். அதிரடியாக விளையாட முடிவு செய்துவிட்டால் 30 பந்துகளில் சதம் அடிக்கவும் தெரியும். 

இந்நிலையில் தான் கடந்த 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை நடந்தநிலையில் அதில் ஆடாமல் அதற்கு ஓராண்டுக்கு முன் திடீரென ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அதன்பின்னர் ஐ.பி.எல். உட்பட மற்ற டி20 லீக் தொடர்களில் மட்டுமே ஏபி டி வில்லியர்ஸ் ஆடிவந்தார். இந்நிலையில் ஐ.பி.எல். உட்பட அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.

a1

கடந்த 2011-ம் ஆண்டு ஆர்.சி.பி. அணிக்குள் வந்த ஏபி டி வில்லியர்ஸ் ஏறக்குறைய 10 சீசன்களாக அந்த அணிக்கு விளையாடியுள்ளார். 5 முறை ஆர்.சி.பி. அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவும் ஏபி டி வில்லியர்ஸ் காரணமாக அமைந்துள்ளார். ஏபி டி வில்லியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐ.பி.எல்.லில் மொத்தமாக 184 போட்டிகளில் ஆடி 5162 ரன்களை குவித்து ஐ.பி.எல்.லில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 6-வது இடத்தில்  ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். ஆர்.சி.பி. அணிக்காக 156 போட்டிகளில் ஆடி 4491 ரன்களை ஏபி டி வில்லியர்ஸ் குவித்துள்ளார்.

ஓய்வு குறித்து ஏபி டி வில்லியர்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
'எனக்கு ஆர்.சி.பி. அணியுடனான ஐ.பி.எல். பயணம் நினைவில் கொள்ளத்தக்கதாக இருக்கும். நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியாகவும், மிகுந்த உற்சாகத்துடனும்தான் விளையாடினேன். எனக்கு 37 வயதானாலும் எந்தவிதமான உற்சாகக் குறைவின்றிதான் களத்தில் விளையாடினேன்.

என்னுடைய குடும்பத்தினர், பெற்றோர், சகோதரர்கள், மனைவி டேனியல்லே மற்றும் குழந்தைகள் தியாகம் செய்யாமல் இந்த உயரத்தை நான் அடைவது சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். என் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். எதிர்பார்த்திருக்கிறேன். 

a2

எனக்கு ஆதரவு தெரிவித்த, என்னுடன் பயணித்த அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உடற்தகுதி நிபுணர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் எனக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனக்கு எப்போதும் கிரிக்கெட்தான் விருப்பமானது. டைட்டான்ஸ், தென் ஆப்பிரிக்க அணி, ஆர்.சி.பி. என உலகம் முழுவதும் பல அணிகளுக்காக விளையாடியிருக்கிறேன். இதன் மூலம் கற்பனை செய்ய முடியாத அளவு அனுபவங்கள், வாய்ப்புகள் கிடைத்தன. இதற்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

ஆர்.சி.பி. அணியுடன் நீண்டகாலம் எனக்குத் தொடர்பு இருக்கிறது. ஏறக்குறைய 11 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிவிட்டு விடைபெறுகிறேன். நீண்டகாலமாக எனது குடும்பத்தினருடன் ஆலோசித்து அவர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தேன். ஆர்.சி.பி. நிர்வாகம், நண்பர் விராட் கோலி, பயிற்சியாளர்கள், ஊழியர்கள், ரசிகர்கள், ஆர்.சி.பி. குடும்பம் அனைவருக்கும் நன்றி.

ஆர்.சி.பி. அணியுடனான பயணம் மறக்க முடியாததாக, வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்ளத்தக்க பயணமாக இருந்தது. எனக்கும் குடும்பத்தாருக்கும் ஆர்.சி.பி. எப்போதும் நெருக்கமாக இருக்கும், தொடர்ந்து ஆதரவு தருவோம். நான் எப்போதும் ஆர்.சி.பி.க்காரர்தான்' இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

It has been an incredible journey, but I have decided to retire from all cricket.

Ever since the back yard matches with my older brothers, I have played the game with pure enjoyment and unbridled enthusiasm. Now, at the age of 37, that flame no longer burns so brightly. pic.twitter.com/W1Z41wFeli

— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021