#IPL2023 “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, மீண்டும் நான் விளையாடுவேன்” என்று, #CSK கேப்டன் தோனி கூறி உள்ளது, சென்னை ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

#IPL2022 சீசனில் கடைசி போட்டியிலும் #CSK படு தோல்வியை அடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை அஸ்வின் தட்டிப் பறித்தார். 

அதாவது, ப்ளே ஆப் வாய்ப்பில் இருந்து ஏற்கனவே சென்னை அணி வெளியேறி இருந்தாலும், #IPL2022 சீசனின் கடைசி லீக் போட்டியில் நேற்று சென்னை அணி களமிறங்கியது. 

அப்போது, டாஸ் போட்ட பிறகு #CSK சென்னை அணியின் கேப்டன் தோனி பேசினார். அப்போது பேசிய #CSK கேப்டன் தோனி, “#CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன்” என்று, குறிப்பிட்டார்.

“#CSK சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நியாயமல்ல, ரசிகர்களை ஏமாற்றுவது சரியாகாது” என்றும், தோனி குறிப்பிட்டு பேசினார்.

அத்துடன், “மும்பையில் எனக்கு ஒரு அணியாகவும், தனி மனிதனாகவும் நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது என்றும், ஆனாலும் #CSK ரசிகர்களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது” என்றும், தோனி குறிப்பறிந்து கூறினார். 

மேலும், “அடுத்த ஆண்டு வெவ்வேறு இடங்களில் #IPL போட்டிகள் நடைபெறும் என்றும், அப்போது ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கலாம்” என்றும், தோனி சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “இது எனது கடைசி ஆண்டாக இருக்குமா? இல்லையா? என்பது ஒரு பெரிய கேள்வியாக உள்ளது என்றும், ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னர் நடக்கப் போவது பற்றி இப்போதே கணிக்க முடியாது எனவும், ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வருவதற்கு கடினமாக உழைக்கிறேன்” என்றும், கேப்டன் தோனி பேசினார்.

இதனிடையே, நடப்பு #IPL2022 சீசனில் தொடர் தோல்விகளை சென்னை அணி சந்தித்து வந்த போதும், ஒவ்வொரு போட்டியிலும் மஞ்சள் நிறத்தாலான ரசிகர்கள் மைதானத்தில் நிரப்பி வந்தது துளியும் குறையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.