கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்நிலையில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் நிலைத்து நின்று ஆடினர். அணியின் ஸ்கோர் 70 ஆக இருந்தபோது ஷ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து மறுபுறம் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 32 பந்துகளில் அரை சதம் அடித்தார்.தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசல் அதிரடி காட்டினார். அவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175  ரன்கள் எடுத்தது.

மேலும் தொடர்ந்து  176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா ரன்களிலும் ,கேன் வில்லியம்சன் ரன்களிலும்  ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ராகுல் திரிபாதி ,ஐடன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினர்.

இந்நிலையில் மார்க்ரம் நிதான ஆட்டத்தை தொடர ,திரிபாதி பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார் தொடர்ந்து விளையாடிய அவர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் மார்க்ரம் நிதானத்தை விட்டு, அதிரடியாக விளையாட தொடங்கினார் . சிறப்பாக விளையாடி 31 பந்துகளில்  அவர் அரைசதம் அடித்தார். இறுதியில் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.