நேற்று முடிந்த ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ்யை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் இன்று  நடைபெற்ற  ஆட்டத்தில்  குஜராத் - சென்னை  அணிகள் மோதின. குஜராத் அணியில் ஹார்திக் பாண்டியா விளையாடாததால் இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக ராஷித் கான் செயல்பட்டார். 

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு  செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் , ராபின் உத்தப்பா களமிறங்கினர். கடந்த போட்டியில் ஹீரோவாக ஜொலித்த உத்தப்பா இந்த போட்டியில் 3  ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த மொயீன் அலி ஒரு ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் ருதுராஜ் அதிரடியாக  விளையாடினார் ,அவருடன் சேர்ந்து அம்பத்தி ராயுடு நிதானமாக விளையாடினார் .சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார் . 

அதனைத்தொடர்ந்து ஆட்டம்  நிதானமாக ஆடி கொண்டிருந்த ராயுடு பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினார், அவர் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதனையடுத்து சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிவம் துபே ,ஜடேஜா கடைசி நேரத்தில்அதிரடி காட்டினர் கடைசி ஓவரில் ஜடேஜா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 170  ரன்கள் என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது .தொடக்க வீரர்களாக சுப்மன் கில்,விருத்திமான் சஹா  களமிறங்கினர் .

மேலும் ஆட்ட தொடக்கத்தில் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த விஜய் ஷங்கரும் ரன் எடுக்காமல் வெளியேறினார். இதனை தொடர்ந்து அபினவ் மனோகர்  ரன்களிலும், விருத்திமான் சஹா 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 8 ஓவர்களில் 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அடுத்து வந்த டேவிட் மில்லர் ,அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஜடேஜாவின் ஒரு ஓவரில் இரண்டு சிக்ஸர்கள். ஒரு பவுண்டரி பறக்கவிட்டதா மில்லர் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். பிறகு திவாட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் களமிறங்கிய ரஷித் கான் அதிரடியாக விளையாடினார்.

இந்நிலையில் மில்லர், ரஷித் கான் இருவரும் சேர்ந்து சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பந்துகளை நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிக்கு பறக்க விட்டனர். ஜோர்டன் வீசிய போட்டியின் 18 வது ஓவரில் மூன்று சிக்ஸர்,ஒரு பவுண்டரி  விரட்டினார் ரஷித் கான். சிறப்பாக விளையாடிய அவர் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது . ஜோர்டன் அந்த ஓவரை வீசினார் அந்த அவரை எதிர்கொண்ட மில்லர்  அணியை வெற்றி பெற செய்தார். இதனால் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.அதிகபட்சமாக  டேவிட் மில்லர் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.