ஐபில் கிரிக்கெட்  முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. 

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர், லிவிங்ஸ்டன் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ராகுல் சாஹர்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேலும் அதன் பிறகு சர்பிரஸ் கான் உடன் மிட்சேல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சர்பிரஸ் கான் ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து அதன் பின்னர் டெல்லி அணியின் பேட்டிங் சரிவை நோக்கி சென்றது. அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்களிலும் , பவல் 2 ரன்களிலும் லிவிங்ஸ்டன் சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மிச்சேல் மார்ஷ்  நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 48 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் லிவிங்ஸ்டன், அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

மேலும் இந்நிலையில் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோவ் - தவான் களமிறங்கினர். 15 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அண்ரிச் நார்ட்ஜெ பந்துவீச்சில் அக்சர் பட்டேல் இடம் கேட்ச் கொடுத்து  பேர்ஸ்டோவ் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய பனுகா ராஜபக்சா 4 ரன்களில் நடையை கட்டினார். அவரை அவுட்டாகிய கையோடு தொடக்க வீரர் தவான்-யும் 19 ரன்களில் ஷர்துல் தாகூர் வெளியேற்றினார்.

இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி சரிவை நோக்கி சென்றது. அக்சர் பந்துவீச்சில் கேப்டன் மயங்க் அகர்வால் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் லிவிங்ஸ்டன் 3 ரன்களிலும் , ஹார்ப்ரீத் பிரார் 1 ரன்னிலும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினர். டெல்லி அணி ஒரு கட்டத்தில் 68 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒருமுனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக விளையாடி வந்தார். அவருடன் இணைந்து இறுதி நேரத்தில் ராகுல் சாஹர் சிறிது அதிரடி காட்ட போட்டியில் பரபரப்பு தொற்றி கொண்டது.

மேலும் சிறப்பாக விளையாடி வந்த ஜிதேஷ் சர்மா 44 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் டேவிட் வார்னர் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது . இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 7-வது வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி அணி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது.