#IPL2022 சீசனில் #CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா விலகியதற்கான காரணம் குறித்து பேசிய கேப்டன் தோனி, “கேப்டன்ஸியை ஸ்பூனில் எடுத்து ஊட்டி விட முடியாது” என்று, ஜடேஜா குறித்தும் முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

#IPL2022 சீசனில் தோனி மீண்டும் கேப்டன்ஸியை ஏற்று உள்ள நிலையில், ஐதராபாத்தை பந்தாடி வெற்றிப் பாதைக்கு சென்னை அணி திரும்பி உள்ளது. 

அத்துடன், நேற்றைய போட்டியில் தோனி மீண்டும் கேப்டன்ஸி பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், ருதுராஜ் உட்பட மெத்த சென்னை டீமுக்கும்  மீண்டும் SPARK வந்துவிட்டதாகவே கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

அதாவது, சென்னை அணி அடுத்தடுத்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், திடீரெனெ ஜடேஜாவும் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். 

இதனால், மீண்டும் கேப்டனாகும் சூழலானது, தோனிக்கு ஏற்பட்டது. இந்த சூழலில் தான் #SRH ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. 

இந்த வெற்றிப் பிறகு பேசிய கேப்டன் தோனி, கேப்டன்ஸி விவகாரம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசினார்.

அப்போது பேசிய தோனி, “கடந்த சீசனின் கடைசியிலேயே கேப்டன்ஸி வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது ஜடேஜாவுக்கு நன்றாகத் தெரியும் என்றும், அதற்குத் தயாராவதற்கு போதிய நேரம் அவருக்கு இருந்தது” என்றும், குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தோனி, “இந்த மாற்றம் படிப்படியாக நிகழ வேண்டும் என நினைத்தோம் என்றும், அதன்படியே முதல் 2 போட்டிகளில் நிறைய விஷயங்கள்பற்றி என்னிடமிருந்து ஜடேஜாவுக்கு சென்றன” என்றும், சுட்டிக்காட்டினார். 

“ஆனால், அதற்குப் பிறகு முடிவுகள் எடுக்கும் பொறுப்பை மொத்தமாக ஜடேஜாவிடம் கொடுத்து விட்டேன்” என்று பேசிய தோனி, “இந்த சீசன் முடியும் போது, கேப்டன்ஸி வேறு யாரோ செய்த உணர்வு இருக்கக்கூடாது, வெறும் டாஸ்ஸுக்கு மட்டுமே கேப்டனாக இருந்த உணர்வு அவருக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்” என்றும், கூறினார். 

“அதனால், படிப்படியாக அவரிடம் முழு பொறுப்பும் கொடுக்கப்பட்டது” என்றும், தோனி வெளிப்படையாகவே பேசினார்.

அத்துடன், “களத்தில் ஒரு கேப்டன் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியதாக இருக்கும் என்றும், அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கவேண்டும் என்றும், அணியின் பலதரப்பட்ட விஷயங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றும், தோனி சுட்டிக்காட்டினார். 

“அதில் சொந்த பர்ஃபாமென்ஸும் அடங்கும் என்றுமு், மனதளவில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், எப்போதும் அதைப் பற்றியே தான் யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கும் என்றும், தூங்கும்போது கூட இது அப்படிதான் இருக்கும்” என்றும், தனது அனுபவங்களை தோனி பகிர்ந்துகொண்டார்.

மேலும், “கேப்டன்ஸியால் ஜடேஜாவும் சொந்த ஆட்டம் பாதிக்கப்பட்டது என்றும், பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கலக்கும் ஜடேஜா #CSK அணிக்குத் தேவை” என்றும், கேப்டன் தோனி வெளிப்படையாகவே பேசினார். 

“கேப்டன்ஸி இல்லை என்றால், அந்த ஜடேஜா எங்களுக்கு கிடைப்பார் என்றால், அதுதான் அணிக்கும் தேவை என்றும், நாங்கள் ஒரு சிறப்பான ஃபீல்டரை இழந்தோம்” என்றும், அவர் தெரிவித்தார்.

இவற்றுடன், “டீப் மிட் - விக்கெட் பொசிஷனில் நல்ல ஒரு ஃபீல்டரை நிறுத்தப் போராட வேண்டியதாக இருந்தது என்றும், எப்படியும் 17-18 கேட்ச்களை இது வரை நாங்கள் விட்டிருக்கிறோம்” என்றும், தனது சோகத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

முன்னதாக, “அடுத்தாண்டும் சென்னைக்காக விளையாடுவீர்களா?” என்ற கேள்வி தோனியிடம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தோனி, “இந்த மஞ்சள் ஜெர்சியோ அல்லது வேறு மஞ்சள் ஜெர்சியோ எதுவாக இருந்தாலும் அடுத்த ஆண்டு நீங்கள் நிச்சயமாக என்னை மஞ்சள் நிற ஜெர்சியில் பார்ப்பீர்கள்” என்று நாசூக்காகவே பதில் அளித்தார். 

அதாவது, “பிளேயராகவோ அல்லது சென்னை அணியில் வேறு ஒருவராகவோ எப்படி இருப்பது என்பதை எதிர்காலம் முடிவு செய்யும்” என்றும், தோனி பேசினார். இப்படியாக, தோனி பேசிய தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.