திமுக சார்பில் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘’ இரட்டை இலைக்கு விழுகின்ற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு விழுகின்ற ஓட்டு. எம்.ஜி.ஆர் போல் அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், மருத்துவமனையிலேயே படுத்துக்கொண்டே வெற்றி பெற இருக்கிறார். 


பாஜக 7 வருடமாகவும், அதிமுக 10 வருடங்களாகவும் ஆட்சியில் இருக்கிறார்கள். இருவரும் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? அமித்ஷாவிடம், என்னுடைய சொத்து முழுக்க அவரின் மகனின் பெயரில் எழுதி வைத்து விடுகிறேன். அவர் மகன் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் என் பெயரில் எழுதி வைக்க முடியுமா என்று கேட்டேன். இதற்காக வீட்டில்  வருமான வரிதுறையினர் சோதனை நடத்தினர். அவர்களின் சோதனைக்கு பயப்படுவதற்கு நாங்கள் எடப்பாடி பழனிசாமியோ பன்னீர்செல்வமோ கிடையாது. 


கடந்த 10 நாட்களாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த செங்கலை எடுத்து வந்திருக்கிறேன். 6ஆம் தேதி வரை எய்ம்ஸ் மருத்துவமனை எனது கண்ட்ரோலில் தான் இருக்கும். 7 ஆம் தேதி மருத்துவமனையை கொடுத்து விடுகிறேன்.” என்றார்.