கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டரில், ‘’ #CovidVaccine முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமூதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்.” என்று பதிவிட்டுள்ளார்.