'மனதின் குரல்' எனப்படும் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில்  நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு  'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ''தமிழ் கற்க வேண்டும் என நான் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. இந்த உலகத்திலேயே மிகவும் அழகான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. ஆனால் என்னால் தமிழ் சரியாக கற்க முடியவில்லை என்றார். 


மேலும் அவர்,‘’ தேர்வுக் காலம் என்பதால் மாணவர்கள் இந்த காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். கிடைக்கும் இந்த நேரத்தை திறம்பட பயன்படுத்தி தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராக வேண்டும்.  மழைக்காலம் தொடங்கும் முன் அனைத்து நீர் நிலைகளையும் சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். மழை நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்க 100 நாள் இயக்கம் தொடங்கப்பட வேண்டும் “ என்று பேசினார்.