“கடந்த 2020-21 ஆம் ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய மாநில கட்சி திமுக” என்று, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் ஆய்வறிக்கை கூறி உள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 

அத்துடன், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த ஓர் ஆண்டு நிறைவடைந்து உள்ளது.

இந்த சூழலில் தான், டெல்லி தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு வருமான அறிவிப்புகளை ஆய்வு செய்த, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், இது குறித்து தற்போது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, “கடந்த அக்டோபர் 31, 2021 ஆம் ஆண்டு வரை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவாக இருந்த போதிலும், கடந்த வெள்ளிக் கிழமை நிலவரப்படி 54 மாநில கட்சிகளில் 23 கட்சிகளின் அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் கிடைக்கவில்லை என்றும், இதனால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் கிடைக்காத கட்சிகள்” என்றும், குறிப்பிட்டு உள்ளது.

அதாவது, இது குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், “கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 பிராந்தியக் கட்சிகளில், திமுக தான் அதிக வருமானம் மற்றும் செலவினங்களைக் கொண்ட கட்சி” என்று, சுட்டிக்காட்டி உள்ளது.

அதன்படி, “அந்த கட்சியின் செலவு, மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேல் என்றும், பகுப்பாய்வு செய்யப்பட்ட 31 கட்சிகளின் மொத்த வருமானம் 529.41 கோடி ரூபாய்” என்றும், குறிப்பிட்டு உள்ளது.

இதில், “திமுக 149.95 கோடி ரூபாய் என்றும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 107.99 கோடி ரூபாய் என்றும், பிஜு ஜனதா தளம் 73.34 கோடி ரூபாய்” என்றும், குறிப்பிட்டு உள்ளது.

அத்துடன், இந்த கட்சிகள் மொத்தம் 414.02 கோடி ரூபாயை செலவாக அறிவித்து இருக்கின்றன என்றும், அதில் திமுகவின் கணக்கு 52.77 சதவீதம் என்றும், அதன் தொகை 218.49 கோடி ரூபாய்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“தெலுங்கு தேசம் கட்சி 54.76 கோடி ரூபாய் செலவாக அறிவித்தது என்றும், அதைத் தொடர்ந்து அதிமுக 42.36 கோடி ரூபாய் என்றும, இப்படியாக 31 கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் தங்கள் வருமானத்திற்கான 47.34 சதவீதம் ஆதாரம் என்று கூறியதாகவும்” தெரிவித்து உள்ளது.

“கடந்த 2019-2020 ஆம் ஆண்டில், 7 தேசியக் கட்சிகளின் வருமானத்தில் 62 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்த தேர்தல் பத்திரங்களிலிருந்து வந்ததாக அறிக்கை கூறி உள்ளது. 

அதன்படி, “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டான கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில் அந்த கட்சியின் வருமானம் 64.90 கோடி ரூபாயாக இருந்தது என்றும், இந்த மதிப்பு கடந்தாண்டில் 131 சதவீதமாக உயர்ந் உள்ளது என்றும், அதன் மதிப்பு தற்போது 149.95 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல, “அதிமுக 34 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது என்றும், அக்கட்சியானது ஆட்சியில் இருந்த கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டில், 89 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது” என்றும், சுட்டிக்காட்டி உள்ளது. 

“இந்தத் தொகையானது கடந்த 2020 - 21 ஆம் ஆண்டில் 34 கோடி ரூபாயாக குறைந்தது என்றும், ஆனால் மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட தற்போது உயர்ந்து உள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

“கடந்த 2019 ஆம் ஆண்டில் 1.50 கோடி ரூபாயாக இருந்த மதிமுகவின் வருமானம், கடந்த 2020 ஆம் ஆண்டில் 2.86 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது என்றும், இது பாமக வின் வருமானம் 55.60 லட்சம் ரூபாயில் இருந்து 1.16 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது” என்றும், கூறப்பட்டு உள்ளது.