ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்ற பழமொழிப்படி தமிழகம் முழுவதும் பிற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு விட்டு நம்ம தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருக்கிறேன் “ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர், ‘’எல்லா தொகுதியில் தேர்தல் பிரசாரம் முடித்து விட்டு, கொளத்தூர் தொகுதிக்கு தாமதமாக வருவதற்காக என் மீது கோபித்துக்கொள்ள வேண்டாம். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது புயல், மழை, வெள்ளம், இயற்கை பேரிடர் என எது வந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்து நிற்பேன்.


எந்த தொகுதிக்கும் கிடைக்காத சிறப்பு கொளத்துருக்கு உண்டு, முதலமைச்சர் வேட்பாளர் தொகுதி என்ற சிறப்பை பெற்றுள்ளது.எதிர்கட்சி தலைவராக இருந்ததை விட முதலமைச்சராக இருக்கும் போது இந்த தொகுதிக்கு நிறைய நல்ல திட்டங்கள் வரும். 234 தொகுதிகளில் மாடல் தொகுதியாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை மாற்றுவேன். “ என்று கூறியுள்ளார்.