அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியினர் சரளமாக பணப்பட்டுவாடா செய்துள்ளனர். வாக்குப்பெட்டியை பாதுக்காப்பதில் என்ன நடக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.  


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனது வாக்கினை பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியது, ‘’ தமிழத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் எழுச்சியோடு வாக்க வருகிறார்கள். இதனை பார்க்கும்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று தெரிகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியினர் சரளமாக பணப்பட்டுவாடா செய்துள்ளனர். இவர்களின் பணபலத்தை  திமுக கூட்டணி முறியடித்து மகத்தான வெற்றி பெறும். 


வாக்கு எண்ணிக்கைக்கு  ஒரு மாதம் காலம் காத்திருக்கும் நிலை, அடுத்த தேர்தலிலாவது நிச்சயம் மாற வேண்டும். இந்த ஒரு மாத காலத்தில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பதில் என்ன நடக்குமோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. ” என்றார்.