தமிழக தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பேசியதாக ஆ.ராசா மீது அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். 


தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வரை தரக்குறைவாக தனிப்பட்ட முறையில் தாக்கி பேசிய ஆ.ராசாவின் பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியது. முதல்வரின் பிறப்பு குறித்து மிகவும் மோசமாக பேசியதற்கு, அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். முகம் சுளிக்க வகையில் அவர் பேசிய பேச்சிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு ஆ.ராசா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆ.ராசா மீது சென்னை காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆ.ராசா மீது 294 (B) அவதூறாகப் பேசுதல், 153 ( இரு சமூக மக்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுதல்), தேர்தல் நடத்தை விதி முறையை மீறுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்


இதற்கு முன்பு  லியோனி ஆகியோரின் பேச்சும் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. கண்டன குரல்கள் அதிகம் எழுந்ததை அடுத்து, திமுக கண்ணியக் குறைவாகப் பேசுவதை அனுமதிக்காது, அடுத்தவர் விமர்சிக்கும் வகையில் திமுகவினர்  வாய்ப்பு அளிக்க கூடாது என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.