கொரோனாவால் உயிரிழந்த இருவரின் சடலங்கள் 15 மாதங்கள் பிணவறையில் இருந்து நிலையில்,  அந்த உடல்களை புழுக்கள் மொய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கிய கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, டெல்டா என்று வீரியமிக்க வைரஸாக மாறியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் 50 வகை பிறழ்வுகளைக் கொண்ட ஒமிக்ரான் கொரோனா வைரஸாக மாறி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. 

கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் முடிவடையாத நிலையில், பெங்களூரு ராஜாஜி நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த இரண்டு சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

covid19

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையில் இந்தியாவில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றியும்  உயிரிழந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட் பகுதியை சேர்ந்த துர்கா மற்றும் கேபி அக்ரகாரா பகுதியை சேர்ந்த முனிராஜ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட இருவரும் பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்த துர்கா மற்றும் முனிராஜ் ஆகிய இருவரின் உடல் மருத்துவமனையில் இருந்த சவகிடங்கு அறையில் வைக்கப்பட்டது.

ஆனால் இரண்டு உடல்களையும் வைக்கப்பட்டதையே மருத்துவமனை நிர்வாகம் மறந்துள்ளது. இது தொடர்பாக உறவினர்கள் தரப்பில் கேட்டபோது அப்போதைய சூழலில் சுகாதாரத்துறையே இருவரின் உடல்களையும் தகனம் செய்ததாக கூறப்பட்டது. இருவரின் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டதால் உறவினர்கள் இது தொடர்பாக பெரிதும் கண்டுகொள்ளவில்லை.

இதனிடையே அந்த மருத்துவமனையில் சவகிடங்கு அறையில் துர்நாற்றம் வீசியதால் பிணவறையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுத்தம் செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த குளிர்பதன பெட்டியை ஊழியர்கள் திறந்துள்ளனர். 

அந்த குளிர்பதன பெட்டியில் புழுக்கள் மொய்த்த நிலையில் இரண்டு உடலங்கள் கிடந்துள்ளன. இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த இரண்டு உடல்களும் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த துர்கா மற்றும் முனிராஜூன் உடல்கள் என்பது தெரியவந்துள்ளது.

உடிஎனை19

15 மாதங்களுக்கு மேலாக இருவரின் உடல்கள் பிணவறையில் அப்படியே கிடந்ததும் உறவினர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மருத்துவமனையின் அலட்சியப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ள உறவினர்கள் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளன.

இதற்கிடையில் ராஜாஜி தொகுதியின் பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ் சுரேஷ்குமார், இது குறித்து தொழிலாளார் நலத்துறை அமைச்சர் ஏ.சிவராம் ஹெப்பாருக்கு கடிதம் எழுதி, ‘இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இரண்டு கொரோனா நோயாளிகள் உயரிழந்து, அவர்களது உடல்களை எரிக்காமல் அலட்சியமாக இருந்ததில் பெங்களூரு மாநகராட்சி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஊழியர்களின் பங்கு மிகவும் அபத்தமானதாகும். 

இந்த விவகாரத்தை விசாரணைக்கு உட்படுத்தி, மனிதநேயமில்லா இச்செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடந்துள்ள இச்சம்பவம் துரதிருஷ்டவசமானதாகும். இச்செயல் பொறுப்பற்றத்தனத்தையும், மனிதநேயமற்ற நடத்தையையும் வெளிப்படுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளார்.