பள்ளிக்கூடம் சென்ற இரு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பள்ளியில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதீயையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் மங்களூரு அடுத்து உள்ள குண்டட்கா கிராமத்தில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் படிக்கும் மதரசா என்ற பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, ஏராளமான மாணவியர் படித்து வருகின்றனர். 

இப்படியான சூழலில் தான், அந்த பள்ளியின் ஆசிரியர் உஸ்தாத் சிராஜுதீன் மதானி, இங்கு படிக்கும் 2 மாணவிகள் மீது சபலப்பட்டு உள்ளார். 

அதனையடுத்து, குறிப்பிட்ட அந்த இரு மாணவிகளையும் தனியாக அழைத்துச் சென்ற அந்த ஆசிரியர், அவர்கள் இருவரையும் பள்ளியில் வைத்தே அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இரு மாணவிகளும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து, அந்த பள்ளியின் ஆசிரியர் மதானி பற்றி, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்க பயந்து உள்ளனர். 

இதனால், வீடு திரும்பிய அந்த இரு மாணவிகளும், தங்களது பெற்றோரிடம் தங்களுக்கு பள்ளியில் நடந்த பாலியல் பலாத்காரம் பற்றி சொல்லி, கண்ணீர் வடித்து உள்ளனர். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், அந்த பள்ளியில் சென்று புகார் அளித்தால் நியாயம் கிடைக்காது என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து, அங்குள்ள புத்துார் மகளிர் போலீசார் வழங்குப் பதிவு செய்து, அந்த இரு மாணவிகளையும் பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் மதானியை அதிரடியாக கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவை அடுத்து, அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.