கொடூரத்தின் உச்சமாக 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாதி எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டு உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர செயல் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் தாண்டாப் பகுதியில் கடந்த 21 ஆம் தேதி புதன் கிழமை அன்று, உடல் பாதி எரிந்த நிலையில், 6 வயது சிறுமியின் உடலை பஞ்சாப் மாநில போலீசார் மீட்டு உள்ளனர். 

அத்துடன், சிறுமியின் உடல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அனைத்து விதமான தடயங்களும் இருந்துள்ளதையும், போலீசார் அதனைப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

குறிப்பாக, அந்த 6 வயது சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகே, சிறுமியின் உடல் எரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதையும் போலீசார், உறுதி செய்தனர்.

இதனையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர்.

மேலும், இது குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த தீவிர விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில்,  ஜலல்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரீத் சிங், அவரின் தாத்தா சுர்ஜித் சிங் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, அந்த பகுதியில் தினக்கூலிக்கு வேலைக்கு சென்று வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. 

குறிப்பாக, அந்த 6 வயது சிறுமிக்கு சாப்பிட பிஸ்கட் கொடுப்பதாகக் கூறி, சுப்ரீத் சிங் அந்த 6 வயது மழலையைத் தூக்கிச் சென்றதாகவும், அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, சிறுமியின் உடலைப் பாதி எரியூட்டப்பட்ட நிலையில், சுப்ரீத் சிங்கின் மாட்டுக் கொட்டைக்கு அருகில் தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார்.

ஆனால், போலீசாரின் விசாரணையில், இந்த உண்மைகள் அடுத்தது தெரிய வந்தது. இதனால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தல், படுகொலை, ஆதாரங்களை அழிக்க முற்படுதல், மற்றும் போக்சோ ஆகிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 

மேலும், இந்த வழக்கில் விரிவான அறிக்கை வரும் 26 ஆம் தேதி வெளியிடப்படும் என்று, மாவட்ட காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால், 2 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனிடையே, கொடூரத்தின் உச்சமாக 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் பாதி எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டு உள்ள சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், உத்திரப் பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.