அடுத்தவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்த போலீஸை கையும் களவுமாகப் பிடித்த ஊர் மக்கள், அவருக்குத் தர்ம அடி கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் காவல் நிலையத்தில் ஷேக் சபீக் என்பவர், போலீஸ் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில், அதே பகுதியில் உள்ள கொத்தகோட்டையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன், இந்த போலீஸ் எஸ்.ஐ. ஷேக் சபீக்கிற்கு அறிமுகம் ஏற்பட்டு, இந்த அறிமுகம் பின் நாளில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விசயம் எப்படியோ, அந்த பெண்ணின் கணவனுக்கும் தெரிய வந்தது. அதுவும், அந்த வீட்டைச் சுற்றி உள்ள அக்கம் பக்கத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக இந்த விசயத்தைத் தெரிந்துகொண்ட அந்த கணவன் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், “அடுத்து என்ன செய்யலாம்?” என்று யோசித்து வந்தார்.

அதன்படி, கள்ளக் காதலர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்த அந்த பெண்ணின் கணவர், வேலை விசயமாக வெளியூருக்கு செல்வதாகத் தனது மனைவியிடம் கூறிவிட்டு தனது வீட்டில் இருந்து வெளியூர் செல்வது போல் புறப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து, கணவன் வீட்டில் இல்லாத கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், உடனடியாக தன்னுடைய கள்ளக் காதலன் எஸ்.ஐ ஷேக் சபீக்கு போன் செய்து உடனே தனது வீட்டுக்கு வரவழைத்து இருக்கிறார். 

அப்போது, தனது வீட்டின் அருகிலேயே வேறொரு வீட்டில் மறைந்து இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் கணவர், எஸ்.ஐ. ஷேக் சபீ தன்னுடைய வீட்டுக்குள் சென்று மனைவியுடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்களைத் திரட்டிச் சென்று கதவைத் தட்டி திறக்கச் செய்திருக்கிறார்.

அப்போது, வீட்டின் கதவு திறந்ததும் உள்ளே இருந்த எஸ்.ஐ ஷேக் சபீயை ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்து மிக கடுமையாகத் தாக்கி உள்ளனர். அப்போது, அவரை அடிக்க வேண்டாம் என்று தடுத்த அந்த பெண்ணையும் அந்த ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

மேலும், இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று தர்ம அடி வாங்கி படுகாயமடைந்த எஸ்.ஐ யை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த சம்பவம் பற்றி தகவல், அந்த மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனையடுத்து,  எஸ்.ஐ. ஷேக் சபீக்கை பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். போலீசாரின் இந்த கள்ளக் காதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.