“பெண்களைப் போல நிறைய ஆண்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை” என்று, பெண்கள் அமைப்பான இந்திய ஜனநாயக பெண்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
 
பாஜக ஆளும் கர்நாடகா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கலந்துகொண்ட தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) உலக சுகாதார தினம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவில், கலந்துகொண்டு பேசிய கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், “இந்தியாவில் உள்ள பல நவீன பெண்கள் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், “அப்படி தனிமையில் இருக்க விரும்பும் பல நவீன பெண்களும் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை என்றும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறவே அவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்” என்றும், கவலையும் தெரிவித்தார். 

மேலும், “நமது சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நல்லதல்ல” என்றும், அமைச்சர் சுதாகர் கவலையுடன் கூறினார்.

முக்கியமாக, “இந்திய சமுதாயத்தில் மேற்கத்திய செல்வாக்கு உள்நுழைந்திருப்பது பற்றி” வருத்தம் தெரிவித்த அமைச்சர் சுதாகர் “துரதிருஷ்டவசமாக, இன்று நாம் மேற்கத்திய வழியில் செல்கிறோம்” என்றும், சுட்டிக்காட்டினார். 

“பெற்றோர் நம்முடன் வாழ்வதை நாம் விரும்புவதில்லை என்றும், தாத்தா - பாட்டி நம்முடன் இருப்பதை மறந்து விட்டோம்” என்றும், அவர் வேதனையுடன் கூறினார். 

“இந்தியாவில் 7 ல் ஒரு இந்தியருக்கு ஒருவித மன நலப் பிரச்னை இருக்கிறது என்றும், இது லேசானது மற்றும் மிதமானதாக அல்லது கடுமையானதாக இருக்கலாம்” என்றும், அவர் வெளிப்படையாகவே பேசினார்.

குறிப்பாக, “மன அழுத்த மேலாண்மை ஒரு கலை என்றும், இந்த கலையை இந்தியர்களாக நாம் கற்க வேண்டியதில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.

பாஜக அமைச்சரின் இந்த கருத்துக்கு பெண்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தன. 

பாஜக அமைச்சரின் இந்த கருத்துக்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளன. 

இது தொடர்பாக அகில இந்திய ஜனநாயக பெண்கள் சங்க துணைத் தலைவர் விமலா பேசும்போது, “ஒரு சுகாதாரத் துறை அமைச்சர் இவ்வாறு பொத்தாம் பொதுவாக கருத்து சொல்வது நியாயமில்லை” என்று, குற்றம்சாட்டி உள்ளார். 

“பெண்களைப் போல நிறைய ஆண்களும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை” என்றும், இந்திய ஜனநாயக பெண்கள் சங்க துணைத் தலைவர் விமலா கூறினார்.

மேலும் பேசிய அவர், “அதை ஏன் அவர் பேச மறுக்கிறார்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார். 

அத்துடன், “அவர் கூற்றுப்படியே இந்தியாவில் எத்தனை பெண்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்? என்பதற்கு, ஆதாரம் இருக்கிறதா?” என்றும், அவர் கேள்வி எழுப்பிய அவர் இதை அவர் நிரூபிக்க வேண்டும்” என்றும், நிறுபித்து உள்ளார். 

குறிப்பாக, “ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதும் எடுக்காததும் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்றும், பெண்களுக்கு அவர்களின் உடலின் மீது உரிமை இருக்கிறது என்பதை அவர் மறந்துவிட்டார் போல” என்றும், அவர் கருத்து கூறியுள்ளார். 

“எந்த விதமான ஆராய்ச்சியும் செய்யாமல் அவர் இப்படி கூறுவது கண்டிக்கத்தக்கது” என்றும், இந்திய ஜனநாயக பெண்கள் சங்க துணைத் தலைவர் விமலா கூறியுள்ளார்.