“இலங்கை, சிக்கப்பூர் நாடுகளில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டதைப் போலவே, இந்தியாவிலும் தமிழ் மொழியை  ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும்” என்று, தென்னிந்திய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் 29 வது தென் மண்டல மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருவதால் அவருக்கு பதிலாக அமைச்சர் பொன்முடி, இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

இந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உரையை அமைச்சர் பொன்முடி அப்போது வாசித்தார்.

அதன்படி, “மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால், கூட்டத்தில் முதலமைச்சரால் பங்கேற்க இயலவில்லை” என்றும், குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, “உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியானது இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தி இருக்கிறார். 

அத்துடன், “மலேசியா, தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை மொழியாகவும் தமிழ் மொழி உள்ளதாகவும், செம்மொழியாம் தமிழ் மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும், திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும்” என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, “திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்” எனடறும், அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும், “மாநிலங்களுக்குக் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதில் அண்டை மாநிலங்களுக்கு ஒற்றுமை முக்கியமானது என்றும், நம்மிடம் பொதுவான உணவு வகைகள், வானிலை மற்றும் பொதுவான மதிப்புகள் உள்ளன” என்றும், சுட்டிக்காட்டி பொன்முடி பேசினார். 

“நமது சகோதரர்கள் பலர் அண்டை மாநிலங்களில் அவர்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களுடன் முழுமையாக இணைந்து வாழ்கின்றனர்” அப்போது, அவர் குறிப்பிட்டார்.

அதே போல், “ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வழங்கும் போது, அந்த நிலத்தின் முழு உரிமையையும் எந்த நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 

“தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டங்கள் பலவற்றுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை” என்றும் அவர் அப்போது குறிப்பிட்டு பேசினார்.

“சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், தமிழ்நாடு முன் மாதிரி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்து உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அத்தகைய திட்டங்களையும் அப்போது அவர் பட்டியலிட்டு இருந்தார். 

முக்கியமாக, “மாநிலங்களுக்கு இடையேயான தேவையற்ற வழக்குகள், பகைமை உணர்வு ஆகியவற்றால் வளர்ச்சி பாதிக்கப்படும்” என்றும், சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இத்தகைய பிரச்னைகளுக்கு அன்பெனும் பொது மொழி கொண்டு தீர்வு கண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவோம்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனையயே, அமைச்சர் பொன்முடி வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.