“அவன்கிட்ட என்ன இருக்குனு நீ அடிக்கடி ஓடி ஓடிப்போறே?” என்று, மனைவிக்காக கள்ளக் காதலனோடு சண்டைபோட்ட கணவனை, கள்ளக் காதலன் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருக்கும் மோரிந்தாவின் மஜ்ரி கிராமத்தில் ராஜு சிங் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

ராஜு சிங், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த பூஜா சிங் என்ற பெண்ணை, முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர்.

இப்படியான சூழலில் தான், ராஜு சிங் மனைவி பூஜா சிங், அதே பகுதியைச் சேர்ந்த தஜீந்தர் சிங் என்பவருடன் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இதனையடுத்து, அவர்களுக்குள் தவறான பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர்.

இப்படியாக, கள்ளக் காதலர்கள் இருவரும் அடிக்கடி திருட்டுத் தனமாகத் தனிமையில் சந்தித்துக்கொள்வது மிகவும் சிரமமாக இருந்த நிலையில், இருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

கள்ளக் காதலன் உடன் ஓடிப்போன பூஜா சிங், தனது இரு மகள்களையும் அழைத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்.

இப்படி, வீட்டை விட்டு ஓடிய கள்ளக் காதலர்கள் இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் வீட்டை விட்டுச் சென்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, பூஜா சிங் தன்னுடைய கணவனிடமே திரும்பி வந்திருக்கிறார்.

இதனையடுத்து, தனது குழந்தைகளுக்கா மனைவியை மன்னித்த அந்த கணவன், தனது மனைவியை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, சில நாட்கள் கழித்து, அந்த கள்ளக் காதலன் மீண்டும் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து “இனி, நான் உன்னுடன் சண்டை போட மாட்டேன் என்று” அந்த கள்ளக் காதலியை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் அந்த பெண், அந்த கள்ளக் காதலன் உடன் மீண்டும் சென்றிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன், தன்னுடைய மைத்துனரை அழைத்துக் கொண்டு தனது மனைவியை அழைக்க அந்த கள்ளக் காதலன் தஜிந்தர் வீட்டிற்குச் சென்று உள்ளார்.

அப்போது, அங்கு கள்ளக் காதலனுக்கும், அந்த பெண்ணின் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு மோதல் நடந்து உள்ளது.

இதில், கடும் ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் தஜிந்தர்,  தனது நண்பனுடன் சேர்ந்துகொண்டு அந்த பெண்ணின் கணவனை அடித்து கொலை செய்து உள்ளார்.

இதனால், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், அங்கேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, அவரின் உடலை அந்த பகுதியின் மச்சிவாராவில் இருக்கும் உள்ள ஒரு வயலில் புதைத்து விட்டனர்.

இதனையடுத்து, 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த கொலை சம்பவம் பற்றி போலீசாரிடம், சமீபத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், கள்ளக் காதலிக்காக, அந்த காதலியின் கணவனைக் கொலை செய்த தஜிந்தரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.