“டைவர்ஸ் வாங்கிய பிறகும்” தேடி வந்து முன்னாள் மனைவியை, எய்ட்ஸ் பாதித்த முன்னாள் கணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த டாக்சி ஒட்டும் டிரைவராக சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்த நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது மனைவியை அவர் பிரிந்து உள்ளார்.

இதனையடுத்து, அவர் தனியாக வசித்து வந்த நிலையில் பெங்களூரில் டாக்சி ஓட்டி வந்தார்.

அப்படியான தருணத்தில், பெங்களூரைச் சேர்ந்த 28 வயது இளம் பெண்ணுக்கும், டாக்சி ஒட்டுநரான சரணவனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி 2 வது திருமணம் நடந்து உள்ளது. 

இந்த சூழலில் தான், கணவன் சரவணனுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆனால், இந்த எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரியாமல் அந்த பெண், தனது கணவருடன் தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்.

அப்போது தான், கணவனின் உடல் நிலை அடிக்கடி பாதிக்கப்பட்ட நிலையில், தனது கணவனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது அவரது நண்பர்கள் சிலரின் மூலமாக தெரிய வந்திருக்கிறது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, இது குறித்து தனது கணவனிடம் கேட்டு சண்டை போட்டு உள்ளார்.

அப்போது, “இந்த எய்ட்ஸ் நோய் எனது முதல் மனைவி மூலமாக எனக்கு வந்தது” என்று கூறி, தனது மனைவியை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். 

ஆனால், அந்த பெண் அவரின் சமாதானத்தை ஏற்க மறுத்த நிலையில், கணவனிடமிருந்து முறைப்டபி டைவர்ஸ் வாங்கி விட்டு, கடந்த 6 ஆண்டுக்கு முன்பே பிரிந்து சென்று தனியாக வசித்து வந்தார்.

இப்படியாக, அந்த பெண் தனது கணவனை பிரிந்து கடந்த 6 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த நிலையில், முன்னாள் கணவன் சரவணன், தனது முன்னாள் மனைவியான அந்த பெண் தேடிச் சேர்ந்து “நான் இப்போது திருந்தி வாழ்கிறேன் என்றும், அதனால் நாம் இனி ஒரே குடும்பமாக வாழலாம்” என்று கூறி, அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து உள்ளார்.

ஆனால், அந்த பெண் இதனை ஏற்க மறுத்த நிலையில், இருவரும் பேசிக்கொண்டே இருந்து உள்ளனர். 

அப்போது, தான் வாங்கிச் சென்ற ஒரு கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க, அந்த பெண்ணிடம் சரவணன் கொடுத்து உள்ளார். 

இதனை வாங்கி குடித்த அந்த பெண், சிறிது நேரத்தில் மயங்கிவிடவே, சரவணன் அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். 

அதன் பிறகு, அந்த பெண் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது, தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் முன்னாள் கணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முக்கியமாக, தனது முன்னாள் கணவன் மூலமாக, “தனக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்ய வேண்டும்” என்று, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கும் சென்று, பரிசோதனை மேற்கொண்டு உள்ளார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.