சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சி தலைவர் நியமனம் செய்வது தொடர்பாகவும், உட்கட்சி தேர்தலை
நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம், அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த காரிய கமிட்டி மூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், தகவல் வெளியானது.

அதாவது, பஞ்சாப் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் வர உள்ள நிலையில், “அந்த மாநிலங்களில் முதலமைச்சர் வேட்பாளர் யார்?” என்பது குறித்தும்
விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. 

அதே போல், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. 

அத்துடன், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று தலைமைப் பதவியை ராகுல்
காந்தி, அப்போது ராஜினாமா செய்திருந்தார்.

அதன் பின்னர், தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இன்று முக்கிய முடிவு எட்டப்படும் என்று கூறப்பட்டது. 

இந்த கூட்டத்தில், காங்கிரஸுக்கு புதிய தலைமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், அபிஷே மனு
சிங்வி உள்ளிட்ட 23 பேர் அடங்கிய ஜி23 யின் கோரிக்கை இன்றைய கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

இவற்றுடன், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அதாவது, வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில்
உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இவற்றில் பஞ்சாப் தவிர மற்ற
அனைத்து மாநிலங்களிலும் பாஜக தான் ஆட்சி நடத்தி வருகிறது. 

எனினும், பஞ்சாபில் உட்கட்சிப் பூசல் மோதல் இன்னும் முடிவடையவில்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல் என்பது அடுத்து வரும் மக்களவைத் தேர்தலுக்கான
முன்னோடமாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த 5 மாநிலத் தேர்தல் என்பது காங்கிரஸ் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது
இருக்கிறது.

இவற்றுடன், இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 52 காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர். திக்விஜய சிங் மற்றும் முன்னாள்
பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 5 தலைவர்கள் இன்றை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதே போல், இந்த கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி , ஜெய் ராம் ரமேஷ், பா.சிதம்பரம், ஏ.கே ஆண்டனி, முகுல் வாசினிக்,
குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த கூட்டத்தில், ஏற்கனவே கூறப்பட்டது போலவே காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் நியமனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அத்துடன், பாஜக எதிர்ப்பு பிரச்சார விளக்க கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “காங்கிரஸ் கட்சிக்குத் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை
தானே கட்சியின் முழு நேர தலைவராக தொடர இருப்பதாகவும், கட்சியில் எதாவது குறைகள் இருந்தால், அதனை மீடியாக்கள் முன்பாக சென்று கூறாமல், தன்னிடம்
தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம்” என்றும், கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.