12 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அந்த சிறுமி உயிரிழந்த பிறகும், வெறிப்பிடித்த 2 பேர் அந்த சிறுமியை விடாமல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலமான அரியானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வட மாநிலங்களில் குறைந்தபாடில்லை. அதற்கு ஒரு சாட்சி தான், தற்போது நடந்திருக்கும் இந்த பாலியல் பலாகர குற்றம். 

அரியானா மாநிலத்தின் பானிபட் நகரில் உர்லானா களன் கிராமத்தைச் சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அத்துடன், அந்த சிறுமி அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இந்த சூழலில் தான், அந்த சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 38 வயதான பிரதீப் மற்றும் அவனது கூட்டாளியான 36 வயதான சாகர், ஆகிய இருவரும், இந்த சிறுமி மீது சபலப்பட்டு அந்த சிறுமியை எப்படியும் அடைய வேண்டும் என்று, திட்டமிட்டு உள்ளனர்.

அதன் படி, அந்த சிறுமி பள்ளிக்கூடம் சென்று வரும் போதெல்லாம் அந்த சிறுமியை அவர்கள் இருவரும் நோட்டமிடடே வந்து உள்ளனர்.

அப்படி தான் அந்த சிறுமி, பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டை கூட்டி சுத்தம் செய்த நிலையில், வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்காக, வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தனியான இடத்திற்கு, தனியாக வந்திருக்கிறார்.

இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட அந்த இருவரும், அந்த 12 வயதான சிறுமியை அங்கிருந்து கடத்திச் சென்று உள்ளனர்.  

அதன் பிறகு, அந்த இருவரில் ஒருவரான பிரதீப் வீட்டிற்கு அந்த சிறுமியை தூக்கிச் சென்று வைத்திருந்து அந்த சிறுமியை மாறி மாறி பலவந்தமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இந்த பலாத்கார சம்பவத்தில், தாக்குதளுக்கு ஆளான அந்த சிறுமி, எதிர்பாரத விதமாக பலாத்காரம் செய்துகொண்டிருக்கும் போதே உயிரிழந்து உள்ளார்.

ஆனாலும், வெறிப்பிடித்த அந்த இரு மிருகங்களும், அந்த சிறுமி உயிரிழந்த பிறகும், அவரை விடாமல் வெறி தீர பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனையடுது்து, அந்த சிறுமியின் உடலை தீ வைத்து எரித்துவிட்டு, அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் எரிந்த சிறுமியின் உடலை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது பற்றி வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணையில், அந்த பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் சாகரை போலீசார் அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் அதிரடியாக மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.